Thursday, January 22, 2009

நெருடல் - 2

பாகம் - 2

காலையில் எழுந்ததும் அதே கோபம், வேகம் மனதில் நேற்று நினைத்தது மறைந்து போய் மீண்டும் சாத்தான் குடிகொள்கிறது. எங்கோ தவறு செய்கின்றேன். பொன்னான நேரத்தை சரியாக செலவிடத் தெரியவில்லை. அமேரிக்கா வந்ததன் நோக்கம் இன்று பணம் என்று ஆகிவிட்டது, ஆனால் அதிலும் கவனம் இல்லை. வங்கி கணக்கு எறவில்லை. நான் பெற்ற சந்தோஷம், எனக்கு கிடைத்த குழந்தை பருவம் என் மகளுக்கும் கிடைக்க வேண்டும். எல்லாம் யோசித்து பார்த்தால் நான் வேலையை விட வேண்டும். ஆனால் அது சரியான முடிவாக இருக்காது.அலுப்பில் வந்த கோபம் இனி சலிப்பில் வரும். இதில் மாற்றம் ஒன்றும் இருக்காது. யோசனைகள் பல வரும், ஆனால் அதை செயலாக்க தீர்க்கமான மனம் வேண்டும்.

என்றோ நடந்த குழந்தை பருவத்தை நினைத்து பரவசமாகும் இந்த மனம் ஏன் என் குழந்தை செய்யும் குட்டி குறும்பில் தெரியவில்லை. எந்திரமாகி போனது வாழ்க்கை மட்டும்மல்ல என் மனமும் தான்.சின்ன சின்ன சந்தோஷங்களை காண மறுக்கிறது. எதிலும் ஒரு கட்டுபாடு. எதிலும் ஒரு விதிமுறை. நீ இது செய்தால் எனக்கு சந்தோஷம். அது செய்தால் எனக்கு சந்தோஷம். உன்னை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்யாமல், என்னை சந்தோஷபடுத்த செயல்கள் செய்கிறாய். அதை ஏன் மாற்றி நான் செய்யக் கூடாது?

என்னிடம் அடி வாங்கிய அன்று மாலை பரிவோடு குழந்தையிடம் கேட்கிறேன் "அம்மா அடிச்சுடேனா? ரொம்ப வலிச்சதா நீ வேணா அம்மாவ திரும்ப அடிச்சுக்கோ" (பலி தீர்க்க கற்று தருகிறேன்). அவளோ என்னை கட்டியனைத்துக் கொண்டு " மம்மீ ஐ லவ் யூ. ஐ வோன்ட் ஹர்ட் யூ" என்கிறாள். எண்ணி பார்த்தால்மனம் பாரமாகி போய் கண்கள் நீர் சுரக்கிறது. பலவாறு யோசித்து தீர்வு காணத் துடிக்கிறது. பலர் வியக்கலாம் மனிதனுக்கு யோசிக்க பெரிய பெரிய பிரச்சனைகள் இருக்க இந்த சிறிய விசயத்திர்க்கு உலத்தி கொண்டிருப்பதாய். ஆழ்ந்து யோசித்தால் உலகின் அணைத்து சச்சரவுகளுக்கும் இதுவை விதையாய் இருக்கும்.

என்னிடம் கற்றுகொண்டது தான் நாளை அவளிடம் வெளிவரும். என் அன்பான பேச்சு அவளை அன்பாய் பேச வைக்கும். 100 மதிப்பென் எடுத்தால் மட்டுமே எனக்கு சந்தோஷம் என்றில்லாமல், நீ படித்து விசயங்கள் தெரிந்து கொண்டாலே நான் மிகவும் மகிழ்வேன் என்று உணர்த்தினால் என்ன? குழந்தையின் சந்தோஷம்.. அவள் உணர்ச்சி, அவள் உரிமை. அதையும் நான் எனக்குள் அடக்கினால் அது கொடுமை. அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று உணர்ந்து வரும் நம் சந்தோஷத்திர்க்கு ஈடு இனை ஏது. குழந்தை பிறர் கண்ணுக்கு அழகாய் தெரியவேண்டும், பிறர் போற்ற வாழ வேண்டும், பிறர் மதிக்க உயரவேண்டும் என்று மனம் பிறர் பற்றி யோசித்து யோசித்து என் உறவை பற்றி யோசிக்க மறந்தேன்.

நான் தாய், நான் உனது நல்லதை மற்றுமே நினைப்பேன். என் சொல்லை கேட்டு நீ நடக்க வேண்டும். என்ன ஒரு அடிமைத்தனத்தை விதைக்கிறோம். இயலாமல் என்னிடம் அடங்கி போகிறாள். அவள் மனம் யோசிக்கிறது, இந்த அடிமைத்தனம் பிடிக்கவில்லை. கோபம் கொள்கிறாள்.அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவள் மனதை இந்த சிரிய வயதில் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறாள். நான் புரிவது இங்கே கொடுமை அல்லவா? கற்று தருகிறேன் என்கிற பொழுதே என்னை அறியாமல் என்னுள் சுயநலமும், தலைகனமும், ஆணவமும் குடிகொள்கிறது. நான் சொல்வது அனைத்தும் சரியன நினைக்கிறது மனம். எது நல்லது எது கெட்டது என்று அவளை சிந்திக்க விடாமல், இதுதான் நல்லது என்று தீர்மானிக்கிறது என் மனம். அது தவறாக இருந்தாழும் ஏற்றுகொள்ள மறுக்கிறது.

தொடரும் பல உவமைகளுடன்.....



2 comments:

  1. ஆஹா, ரொம்ப இயல்பாகவும், மனந் திறந்த உண்மையாகவும் எழுதியிருக்கிறீங்க! தெளிவான தடுமாற்றமில்லாத எழுத்து நடை, தொடர்ந்து எழுதுங்க!!

    ReplyDelete
  2. நன்றி நம்பி. மனதை நெருடும் சில எண்ணங்களை எழுதி தீர்க்க சிறு முயற்சி.

    ReplyDelete