Tuesday, March 17, 2009

ஏழை விவசாயி

ஏழு காணி நிலம் கொண்டு
எருதிரண்டு ஏர் பூட்டி

தொட்டதெல்லாம் துலங்க வேண்டி
குலதெய்வம் பொங்கலிட்டு

ஊர் கம்மா நீர்ரிரைத்து
உழுது உரம் தான் போட்டு

கட்டினவள் கழுத்து தாலி
பத்து வட்டி கடன் பட்டு

வாய கட்டி வயத்த கட்டி
வாங்கியாந்த விதை நெல்லில்

பாத்தி கட்டி நாத்து நட்டு
பதமாய் நிதம் செப்பனிட்டு

ஈர துணிப் பசியாற்ற
இரவுபகல் பாடு பட்டு

பார்த்த விளைச்சல் பொன்னி
தம்பி உன் பசியாற்ற எண்ணி

பலர் பட்டணத்து பகட்டுக்காக
பாதி சோறு மீதியாக்க

இங்கே, பாடுபட்ட கூலிக்காரன்
பெத்த வயிறு பட்டினியாய்

விருந்து எனும் வேட்கை கொண்டு
விரயம் செய்யும் மானிடரோ

மருந்து இன்றி சரிந்து விழும்
மாந்தர் தம்மை காண்பாரோ

ஏற்றம் வேண்டி ஏங்கி நிற்கும்
ஏழை அவன் வாழ்க்கை மட்டும்

என்றும் மாற்றம் இன்றி மரித்து
போகும் அவல நிலை மாறிடுமோ............................. 


 

No comments:

Post a Comment