Wednesday, October 20, 2010

உறவுக்கு நன்றி!

ஈரைந்து மாதங்கள்
எனைக் கருவறையில் சுமந்திட்ட உறவுக்கும்...

இருபத்தொரு வருடங்கள்
தன் தோளோடு தாங்கிட்ட
உறவுக்கும்...

அழகான இவ்வுலகை நல்
அறிவால் அடையாளம் காட்டிட்ட
உறவுக்கும்...

சிறு சண்டைகள் இட்டாலும்
பெரும் சந்தோஷம் தந்திட்ட
உறவுக்கும்...

தோளொடு எனை சேர்த்து
பல துயரங்கள் துடைத்திட்ட
உறவுக்கும்...

மலர் மாலை தான் சூடி வாழ்கை
வழி நெடுக சேர்த்திட்ட
உறவுக்கும்...

வைரமாய் என்னுள்ளே சிறு
மழலையாய் உதித்திட்ட
உறவுக்கும்...

வாழ்கை எனும் பொருள் விளக்க
நம்மோடு வாழ்ந்து மறைந்திட்ட
பலப்பல உறவுகளுக்கும்...

உறங்கும் தலையணை முதல்
உண்ணும் உணவு வரை...
தான் உழைத்து எனைக் காத்திட்ட
ஒவ்வொரு உறவுக்கும்...

நிறை என்று
வாழும் இவ்வாழ்க்கை
குறை என்று என்னுள் இல்லாது
இறையாக நின்று உணர்ந்திடும்
உறவுக்கும்...

நான் கூறும்...
நன்றி என்ற ஒர்
வார்த்தை போறாது...

ஏனோ இம்மனம்...
நன்றியென்ற
வார்த்தையன்றி வேறு அறியாது!!!

நீயன்று அசையாத
ஒவ்வொரு அணுவையும்
உறவாக
நான் எண்ண நல்மனம்
கொடு இறைவா.....



தூக்கம் வேண்டி

தூக்கம் வேண்டி

செல்வம் தான்

வாழ்க்கை எனத்
தேடி நிதம்
நான் சேர்த்தேன்...

அரண்மனை வீடமைத்து
67 அறைகள் வைத்து
தங்கக் கட்டிலில் விரிக்கப்
பட்டுக் கம்பளம்...

மெல்லிய இசைதனில்
மல்லிகை மணத்துடன்
உறக்கம் தேடி
நான் செல்ல...

தூக்கம் என்னை
துரத்தி விட்டு
தழுவிக் கொண்டது என்
வீட்டுத் தோட்டக்காரனை...

எள்ளி நகையாடியது உள்மனம்!!!

ஆற்றப் போவது
பசியை அதில்
2 ரூபாய் அரிசியென்ன?
200 ரூபாய் அரிசியென்ன?

கோடிகள் விலை கொடுத்து
தூக்கத்தை தேடுகிறாய்
ஏழையவள் கந்தலை --- உன்
கைக்குட்டை மறைக்க கொடு....

அந்த காத்தாயி
தாலாட்டு உன்னை
கண்ணுறங்க செய்யுமென்று!!!!!

-----
ப்ரியாகணேஷ்



Tuesday, June 29, 2010

அன்னை

சென்ற மாதம் குழந்தையின் எதிர்பார்ப்பை என் எண்ணோட்டத்தில் பதிவு செய்தோம். அன்னையின் அருகாமையும் அன்பையும் அனுபவித்து கொண்டிருக்கும் எனக்கு, தாயின் அன்பை பற்றி தோன்றிய எண்ணங்களை ஒரு கவிதையாய் பதிவு செய்ய விருப்பம். நான் எழுதும் வரிகளில் அடங்கிடாது இந்த அன்பு. ஆயிரம் புலவர்கள் வந்தாலும் பல்லாயிரம் கவிதைகள் தந்தாலும், எந்த ஒரு அன்பையும் , பாசத்தையும் உணர்ந்தால் மட்டுமே சுகம். இச்சுகம் கிட்டாத குழந்தைகளுக்கு மடி சுமக்கா அன்னையாய் வாழும் பல உள்ளங்களை வாழ்த்தி வணங்குவோம்.

அன்னையே,

நின்னுள்ளே உயிர் தந்து
பத்து திங்கள் மடி சுமந்து
மாரணைத்து பசி தீர்த்து
எறும்பு ஈ அன்டிடாமல்
இமையாக எனை காத்து...........

ஏறி நான் விளையாட
குதிரையாய் வலம் வந்து
சோகங்கள் காணாமல்
சுமையெல்லாம் நீ ஏற்று
ஊர் மெச்ச நான் வளர
உரமாக உனை இட்டு............

உன் தோழி நான் என்று
துயர் துடைத்து மகிழ்வித்து
உடையவன் கைபிடிக்க இரு
கண்ணில் நீர் கோர்த்து
ஊர் காவல் தெய்வமெல்லாம்
எனை காக்க வேண்டி நின்று............

எனக்கும் அன்னையாய் என்
பிள்ளைக்கும் அன்னையாய்
நான் உதித்த காலம் கொண்டு
நீ மறையும் காலம் வரை
என்றும் உன் நினைவில்
உயிராக நிதம் காப்பாய்.............

ஆயிரம் உறவுகள் அருகில்
நான் கண்டாலும், அன்னை
உன் அன்பிற்கு ஈடுன்றோ இவ்வுலகில்
கோடிகள் கொடுத்தாலும் உனை
கோவில் கொண்டு தொழுதாலும்,
கொண்ட கடன் தீர்ந்திடுமோ.........

என் நன்றி உனை சேர வேண்டி,

வரம் வேண்டும் வரம் வேண்டும்
உனை மடிசுமக்க வரம் வேண்டும்
மறு ஜென்மம் உண்டென்றால் என்,
மகளாக உனை வளர்க்க ...
வரம் வேண்டும் வரம் வேண்டும்
உனை மடிசுமக்க வரம் வேண்டும்............


Monday, May 10, 2010

நெருடல் - 4

பாகம் - 4

நீண்ட இடைவேளிக்கு பின் தோழி ஒருத்தியின் ஊந்துதலில் உதித்த எண்ணங்கள், நெருடலின் தொடர்ச்சியாய்.....

நேற்று அன்னையர் தினம். என் செல்ல மகளின் பள்ளியில் அதற்கான கொண்டாட்டம். கலர் கலர் பாசி கொண்டு நேர்த்தியின்றி என் கைக்கு அவள் தொடுத்த வளையல். என் கண்ணை மூட சொல்லி அணிவிக்கிறாள். அந்த அன்பிற்கு ஈடு இணை ஆகுமா இவ்வுலகில் இருக்கும் அணைத்து செல்வமும். இன்றும் நான் உணர்ந்தேன் முதல் முதலில் ஸ்கேன் இயந்திரத்தில் அவளை என்னுள் கண்ட அந்த சந்தோசத்தை போன்று ஓர் மகிழ்வை. வாரியணைத்து உச்சி முகர்ந்து உள்ளந்தலையில் ஒரு முத்தம் . அவள் முகத்தில் இவுலகையே வென்ற ஒரு மகிழ்ச்சி. என் மகள் என்னிடம் எதிர் பார்ப்பது இதை தானோ. என்னவாக இருக்கும் அவள் சிறு சிறு எதிர்பார்ப்புகள் என்று எண்ணிய போது உதிக்கிறது ஒரு கவிதை

என் செல்ல அம்மா

காலை முத்தம் அன்பாய் வேணும்
கட்டியணைக்க நீ அருகில் வேணும்
செல்ல சினுங்கள் நான் செய்ய வேணும்
நீ கொஞ்சும் கோபம் கொள்ள வேணும்

இரவு கனவு நான் பகிர என்னை
குளிப்பாட்டி தலைவாரி பூச்சூடி
பிடித்த உடை அணிய என்னை நீ
தேவதை என புகழ வேணும்

உன் மடியில் எனை அமர்த்தி
உறவு பலம் அதை உணர்த்தி
உனக்கொரு வாய் என்னகொரு வாய்
என இருவர் பகிர்ந்து உண்ண வேணும்

நீயும் நானும் சேர்ந்து கொண்டு
அப்பாவை சிறிது அரட்ட வேணும்
பொய்யாய் ஒரு கோபம் கொண்டு
அவர் கட்டியனைத்து மகிழ வேணும்

பிடித்த பாடல் சேர்ந்து பாட
30
நிமிட தொலைக்காட்சி வேணும்
முட்டி மோதி கிளம்பும் போதும்
முனங்கள் இன்றி பேசிட வேணும்

பள்ளி செல்லும் நேரம் அதில்
கதைகள் பல பேச வேணும்
என் அசட்டு பேச்சு தெரிந்தும்
நீ அன்பாய் அதை கேட்க வேணும்

மாலை நேரம் அழைத்து செல்ல
பள்ளி ஓடி நீ வர வேணும்
ஏங்கி நிற்கும் எனை கண்டு
உன் மாரனைத்து தூக்க வேணும்

நான் கிரிக்கி வைத்த படங்கள் கூட
நீ ஓவியம் என புகழ வேணும்
பள்ளி கதைகள் நான் கூற
நீ பாசத்துடன் கேட்க வேணும்

கிடைக்கும் அந்த மாலை நேரம்
விளையாடி நான் மகிழ வேணும்
இரவு சமையல் உன்னோடு
உதவி கொஞ்சம் செய்ய வேணும்

நிலா சோறு நீ ஊட்ட எனக்கு
ராஜா ராணி கதைகள் வேணும்
வீட்டுப்பாடம் செய்யும் போதும்
விருப்பமாய் நீ அருகில் வேணும்

விருப்பமில்லா செயல் மறுத்தால்
நீ வருத்தமின்றி ஏற்க வேணும்
இரவு குளிர் நான் போக்க உன்
கதகதப்பு என் அருகில் வேணும்

காலை தொடங்கி மாலை வரை
உன் கண்ணருகில் நான் வேணும்
கவலை மறந்து கவனம் கொண்டு
போற்றி நிதம் வளர்த்திட வேணும்

என் செல்ல அம்மா....................

Friday, April 9, 2010

நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சில வருடங்கள் முன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாய் எழுதியது 

அகிலம் கண்ட பிரச்சனை
அனைத்தும் அரை 
மணிப் பொழுதில்
அலசி பார்க்கும்...

வாரவிடுமுறை
வந்துவிட்டால்
கட்டு போட்டு
பாடி மகிலும்...

ஆறி போன
தோசை, ஆனாலும்
கூட்டு சேர்ந்து
உண்ண தூண்டும்...

தோள் கொடுக்க
நீ இருக்க இங்கே
துயரங்கள் 
அஞ்சி நிற்கும்...

நீ கொண்ட
உறவுகள் எல்லாம்
என்  உறவாய் மனம் 
எண்ணி மகிழும் ...

கனவுகள் நீ
கண்டால் அதை
நிஜமாக்க நிதம் 
முயற்சி கொள்ளும்...

நண்பனே.............

வயது கடந்து
தலை நரைத்து
தள்ளாடி தடியோடு
நின்றாலும்...

என்றும்

வாடாது பூத்திருக்கும்
பூ வாக மனம் வீசும்
உன்னத நம் நட்புக்கு.....

நட்பான நண்பனுக்கு
எங்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........