Friday, April 9, 2010

நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சில வருடங்கள் முன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாய் எழுதியது 

அகிலம் கண்ட பிரச்சனை
அனைத்தும் அரை 
மணிப் பொழுதில்
அலசி பார்க்கும்...

வாரவிடுமுறை
வந்துவிட்டால்
கட்டு போட்டு
பாடி மகிலும்...

ஆறி போன
தோசை, ஆனாலும்
கூட்டு சேர்ந்து
உண்ண தூண்டும்...

தோள் கொடுக்க
நீ இருக்க இங்கே
துயரங்கள் 
அஞ்சி நிற்கும்...

நீ கொண்ட
உறவுகள் எல்லாம்
என்  உறவாய் மனம் 
எண்ணி மகிழும் ...

கனவுகள் நீ
கண்டால் அதை
நிஜமாக்க நிதம் 
முயற்சி கொள்ளும்...

நண்பனே.............

வயது கடந்து
தலை நரைத்து
தள்ளாடி தடியோடு
நின்றாலும்...

என்றும்

வாடாது பூத்திருக்கும்
பூ வாக மனம் வீசும்
உன்னத நம் நட்புக்கு.....

நட்பான நண்பனுக்கு
எங்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........
              

No comments:

Post a Comment