Tuesday, January 24, 2017

நன்றி நன்றி நன்றி சகோதர சகோதரிகளே


ஆதாயம் தேடும் அரசியல் 
உண்மை கூறா ஊடகம் 
வெறியாட்ட விஷமிகள் 
காவலுள் சில கேவலம்.......

எத்தனை வரினும் எத்தனை வரினும்

இழிச்சொல் பழிச்சொல் எதிர்த்து நின்றாய் 
உரிமை காத்தாய் உறவு காத்தாய்
புரட்சிக்கும் ஒரு புரிதல் செய்தாய் 
உலகம் வியக்க வெற்றி கண்டாய்.....

போராடி நீ பெற்ற பொக்கிஷத்தை 
நல் பால் உண்ணும் மகளிடம் 
நாளை,மார்தட்டி புகழச் சொல்வேன்.....

தடம் மாறா தம்பிக்கும் தங்கைக்கும் நான் அக்காள் என்று 
அறம் மாறா அண்ணனுக்கும் அக்காளுக்கும் நான் தங்கை என்று 
அன்பு ஊட்டும் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் நான் மகள் என்று.......

நன்றி நன்றி நன்றி சகோதர சகோதரிகளே.....